தமிழ் சினிமாவில் கதாநாயகி வாய்ப்புக்காக கஷ்டப்பட்டு நுழைந்த ஷகிலாவுக்கு துணை நடிகை கதாபாத்திரம்தான் கிடைத்தது. மூன்று, நான்கு படங்களில் நடித்த ஷகிலா பின்னர் மலையாள கரையோரம் ஒதுங்கினார்.
அங்கு அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டியது. ஆனால் கவர்ச்சி வாய்ப்பே கிடைக்க, வேற வழியில்லாமல், பணம் புகழ் சம்பாதிக்க கவர்ச்சி நடிகையாகவே மாறினார்.அவரின் அந்த படத்திற்கு கூட்டம் கூடியது. ரசிகர்கள் பெருகிறது. மம்முட்டி, மோகன் லால் படங்கள் வெளியான போது, ஷகிலா படம் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. இதனால் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படம் படுத்துறங்கியது.
இதையடுத்து மலையாளத்தில் கடையை விரித்த ஷகிலாவுக்கு காசு மழை கொட்டியது. என்னதான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், அவருக்கும் மனசு என்று ஒன்று இருக்கிறது. தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் ஷகிலா.
ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா கவர்ச்சிக் கன்னியாக உயர்ந்த போது, ஒரு படத்தில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டிய கட்டாயம் ஷகிலாவுக்கு ஏற்பட்டது.
கவர்ச்சி நடிகை ஷகிலா சில வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாத நிலையில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மீடியாவுக்குள் வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஷகிலா யூடியூபில் தற்பொழுது பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது ஷகிலா அவருடைய சொந்த வாழ்க்கை பற்றியும் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
கவர்ச்சி நடிகை ஷகிலா தன்னுடைய கடந்த கால சினிமாவை பற்றி பேசிய போது ஒரு படத்தைப் பற்றியும், அந்த பட குழு செய்த தவறை பற்றியும் ரொம்பவே கோபமாக பேசி உள்ளார். அதில் அவர், சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோ பிக் ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்னும் பெயரில் வெளியான நிலையில், அந்த படத்தில் தன்னை பற்றி கூறி இருப்பதே பொய் என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் அப்படத்தில் தன்னை தவறாக காட்டிய அந்த படக்குழு மீது செம கோவத்தில் இருப்பதாகவும், நேரில் பார்த்தால் கண்டிப்பாக ஏதாவது கேட்டு விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.