என் நடத்தையை பத்தி பேசி.. உணர்ச்சி வசப்பட்ட நடிகை சினேகா..!

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் எடுத்த பேட்டி ஒன்றில், உங்களின் உண்மையான பெயர் சுகாசினி சினேகா என்ற பெயரில் வலம் வந்ததால் சாதாரண பெண் சுகாசினி சினேகாவை பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா அதை எப்படி எதிர் கொண்டீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சினேகா என்னை பற்றி பல கிசுகிசுகள் வந்துவிட்டது. இனிமேல் என்னை பற்றி இப்படித்தான் எழுதவேண்டும் என்று யோசித்தால் தான் முடியும். அந்த அளவிற்கு என்னை பற்றி ஒற்றை கிசுகிசுக்கள் வந்தது. ஆனால், ஆரம்பத்தில் என்னை கடுமையாக அவை பாதித்தன.

என் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை என்று எல்லாவற்றையும் பாதித்தது. ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு என்னைப் பற்றி தெரியாமல் பத்திரிகையில் ஒரு பக்கத்தை நிரப்பவும் சுவாரசியமாக வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு தனிப்பட்ட நபரை நடிகை என்ற ஒரே காரணத்தினால் எந்த ஆதாரமும் இல்லாமல் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுகிறார்கள்.

இது பற்றி ஒரு பத்திரிக்கையாளரை உங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெண்ணோடு தொடர்பு படுத்தி நான் கிசுகிசு எழுதி உங்கள் மனைவிக்கும் உங்கள் குழந்தைக்கும் அதை கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேள்வியை கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை. ஆரம்பகாலத்தில் இப்படியான பிரச்சினை எதிர்கொண்டு போக போக நான் கண்டுகொள்ளாமல் வேலையில் பிஸியாகிவிட்டேன் என்று நடிகை சினேகா கூறியிருந்தார்.

இதனிடையே, கருத்து வேறுபாடு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் பிரசன்னாவுடன் ரொமான்ஸ் செய்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைத்திற்கும் நடிகை சினேகா முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

18 minutes ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

22 minutes ago

பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…

50 minutes ago

பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…

கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…

2 hours ago

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

4 hours ago

This website uses cookies.