சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஹைதராபாத்: இது தொடர்பாக நடிகை செளந்தர்யாவின் கணவர் ரகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரம் அற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன்.
மோகன் பாபு, எனது மனைவி மறைந்த சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை இங்கு உறுதிப்படுத்துகிறேன். எனக்குத் தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நிலப் பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மோகன் பாபுவை அறிவேன்.
இந்த நிலையில், உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். நாங்கள் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்துகொள்கிறோம். இது ஒரு தவறான செய்தி என்பதால், இதனைப் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெலுங்கானா மாநிலம், கம்மம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசித்து வரும் எடுரு கட்லா சிட்டிபாபு என்பவர், நடிகை செளந்தர்யா திரைப்படத் துறையில் உச்சத்தில் இருந்தபோது, ஹைதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் 6 ஏக்கர் நிலத்தில் விருந்தினர் மாளிகை கட்டி இருந்தார்.
இதையும் படிங்க: மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!
தற்போதைய சந்தை மதிப்பில் அது 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். அந்த விருந்தினர் மாளிகையை தனக்கு விற்க நடிகர் மோகன் பாபு கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் அதற்கு மறுத்துவிட்டதாகவும், எனவே ஆத்திரமடைந்த மோகன் பாபு, நன்கு திட்டமிட்டு சௌந்தர்யாவையும், அவரது சகோதரர் அமர்நாத்தையும் கொலை செய்ததாக சிட்டிபாபு குற்றம் சாட்டி இருந்தார்.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.