நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.
நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இவரது மரணம் குறித்து உண்மை இன்றுவரை மர்மமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் கந்தராஜ் ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை சமீபத்தில் கூறி அதிரவைத்துள்ளார். அதாவது. ஸ்ரீதேவியை சின்ன வயசுல குட்டி பெண்ணாக நான் பார்த்துள்ளேன்.
திடீரென அவரது அப்பா இறந்துவிட்டதால் ஸ்ரீதேவியை வழிகாட்ட யாரும் இல்லை. ஸ்ரீதேவிக்கு கடன் கிடையாது. இருந்தாலும் போனி கபூர் சொத்துக்காக ஸ்ரீதேவியை இரண்டாம் கல்யாணம் செஞ்சிகிட்டார். அதே போல் அவரும் அந்த காலத்தில் நன்றாக சம்பாதித்துக்கொண்டிருந்தவர் தான்.
இதனிடையே, ஸ்ரீ தேவியை பார்த்தும் அவரது ஆடம்பர வசதிகளை பார்த்தும் குடும்பத்தில் உள்ளவர்களே பொறாமை பட்டார்கள். மேலும், ஸ்ரீ தேவி ரூ. 200 கோடிக்கு இன்சூரன்ஸ் செஞ்சிருந்தாங்க அந்த பணத்திற்காக தான் ஸ்ரீதேவியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்கள் என பகிரங்கமாக பேசி இருந்தார்.
ஸ்ரீதேவியின் அம்மா மது பழக்கம் உடையவர். மேலும், நடிகை ஸ்ரீதேவியை தூங்கவைக்க அவரின் அம்மா வயின் கொடுத்ததாகவும், இந்த பழக்கம் தான் ஸ்ரீதேவியின் பின்னால் காலத்தில் நாசமாக்கியது என்று குட்டி பத்மினி தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நுழைந்து நடித்து வருகிறார். அவரது இரண்டாவது மகளும் விரைவில் நடிக்க வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் ஸ்ரீதேவியின் பிறந்தநாள் வர அவரது மகள் ஜான்வி தனது அம்மா மற்றும் அவரது அம்மாவுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இவங்க தான் ஸ்ரீதேவியை அதட்டி வைச்சாங்களா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.