முதல் புருஷன் நல்லவர் தான்…. ஆனால் – மறுமணம் பற்றி மனம் திறந்த சீரியல் நடிகை!

நாதஸ்வரம் சீரியலில் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு பெயரை சம்பாதித்தவர் தான் நடிகை ஸ்ரீதிகா. மலேசியாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கு சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இடத்தைப் பிடித்தார் .

பார்ப்பதற்கு ஹோம்லியாக மிகவும் பவ்யமான தோற்றத்தில் இருந்த ஸ்ரீதிகாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இவர் மகராசி சீரியலில் தன்னோடு நடித்து வந்த நடிகர் ஆர்யன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஆரியனுக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் முதல் கணவரை ஏன் பிரிந்தேன்? விவாகரத்து செய்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது, “என்னுடைய முதல் கணவர் மிகவும் நல்ல மனிதர் தான். அவர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்குள் எங்கள் இருவருக்கும் அந்த வாழ்க்கை சரிவர அமையவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அது போக போக சரியாகிவிடும் என்று நாங்கள் இருவரும் நினைத்தோம். ஆனால், போகப் போக பிரச்சனை அதிகமாகி கொண்டுதான் இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இந்த வாழ்க்கையை தொடர முடியாது என நாங்கள் இருவருமே சமரசமாக பேசி அந்த வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம்.

எங்களுக்கு ஒன்றும் சிறுவயதில் திருமணம் ஆகவில்லை. நல்ல மெச்சியூர் ஆன 30 வயசில் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால், எனக்கு அந்த திருமண வாழ்க்கை நான் நினைத்தது போல் அமையாதுதால் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அதற்கான மிக முக்கிய காரணம், “இயற்கையான குணத்துடன் ஒருவர் இருக்க வேண்டும். நமக்காக அவர்களை மாற்றிக்கொள்ள ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது.

அப்படிப்பட்ட நபர்களோடு தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கிட்டத்தட்ட எனக்கு ஏற்பட்டது போலவே பிரச்சனை தான் ஆரியனுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்டது. இதனால் முதல் மனைவியை பிரிந்த ஆரியன் என்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என ஸ்ரீதிகா கூறினார்.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.