தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் வெற்றி பெற்ற நடிகையாக வலம் வந்துள்ளார்.
இதையும் படியுங்க: முடியல..கெஞ்சி கேக்குற விடுங்க…வைரலாகும் தமன்னா வீடியோ.!
இவருடைய திறமையான நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.மேலும், ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் முத்திரை பதித்தார்.
சுஹாசினி,தனது கணவர் மணிரத்னத்துடன் சேர்ந்து ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.இதற்காகவே பல தரமான சினிமாக்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.அதுமட்டுமன்றி, ‘நாம் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம்,ஆதரவற்ற பெண்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில்,சமீபத்தில் நடிகை சுஹாசினி,தனது உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.அவருடைய சொற்பொழிவின் போது “நான் ஆறுவயதில் இருந்தே டி.பி (காசநோய்) பாதிப்பு அடைந்தேன்.
சிறிய பருவத்திலேயே இதற்கான சிகிச்சை எடுத்ததால் எல்லாம் சரியாகி விட்டது. ஆனால் 36 வயதில் மீண்டும் அதே நோய் வந்துவிட்டது. இதனால் என் உடல் எடை திடீரென அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும், இந்த நோய் என் கேட்கும் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தியது” என்று கூறினார்.
இதையடுத்து சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு எந்நேரமும் மன உறுதியுடன் இருந்ததன் காரணமாக தற்போது முழுமையாக குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தான் இந்த வியாதியை எல்லோரிடமும் பகிர்வதை,முதலில் வெட்கமாக நினைத்தாலும்,இன்று இதை வெளிப்படையாக கூறுவது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.