மணிரத்தினம் அப்படி இல்லை… நான் செய்த மிகப்பெரிய தவறு – நடிகை ஸ்வர்ணமால்யா ஆதங்கம்!

2000 காலகட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் அலைபாயுதே, எங்கள் அண்ணா,மொழி, அழகு நிலையம், சங்கரன்கோவில், இங்கே என்ன சொல்லுது, புலிவால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

இதில் குறிப்பாக அலைபாயுதே திரைப்படத்தில் அவர் அறிமுகமானார். அறிமுகப்படமே அவருக்கு மிகச்சிறந்த பெயரையும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதையடுத்து ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மொழி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது அவருக்கு கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஸ்வர்ணமால்யா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது நான் சிறுவயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கவில்லை. அந்த முடிவை ஒரு நல்ல எண்ணத்தில் என்னுடைய பெற்றோர்கள் எடுத்தார்கள் .

அதனால் நான் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணம் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. நாங்கள் எதிர்பார்த்தது போல திருமண வாழ்க்கை அமையவில்லை. அதற்காக நான் யாரிடமும் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதனால் நேரம் தான் வீணாகும்.. எனக்கு கூறினார்.

மேலும் திரைப்பட அனுபவம் குறித்து கேட்டதற்கு நான் இயக்குனர் மணிரத்தினம் போல் எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்க அப்படின்னு நினைச்சுட்டேன். அப்படி ஒரு இயக்குனரை நம்பி அந்த மாதிரி ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து நடித்தேன்.

அந்த படத்தில் பத்து நிமிடங்கள் நடித்த பிறகுதான் நான் எந்த அளவுக்கு முட்டாளாக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிய வந்தது. இருந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் இந்த மாதிரி படங்களில் நடித்ததை விட நான் திருமணம் செய்து தான் மிகப்பெரிய தவறு என நினைக்கிறேன் என இந்த பேட்டியில் ஆதகத்தோடு பேசினார்.

Anitha

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

11 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

12 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

13 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

13 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

14 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

14 hours ago

This website uses cookies.