பெண் பிள்ளைகள் என்றாலே குறிப்பிட்ட பருவத்தை அடைந்து விட்டால் உடனே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புவார்கள்.அந்த வரிசையில் வர்ஷாவுக்கு விரைவில் திருமணம் என்று வதந்திகள் பரவி வந்த வேளையில் அது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாமல் பரிதவித்தார்கள் ரசிகர்கள்.
அட யார் அந்த வர்ஷா என்று நீங்கள் யோசிப்பது மிக நன்றாக தெரிகிறது. இவர் 96, பிகில், செல்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனும் தென்னிந்திய மொழிகளில் இவர் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பை பார்ப்பதற்கு என்றே தெலுங்கில் ஒரு கூட்டம் உள்ளது என்று கூறலாம்.இதனை அடுத்து சில நாட்களாக வர்ஷா கிழங்கு தயாரிப்பாளரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் மிக வேகமாக பரவி வந்தது.
இதனை அடுத்து ரசிகர்கள் இது உண்மையாக இருக்குமோ என்று கருதிய வேளையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை வர்ஷா.
ஆம் நடிகை வர்ஷா தனது திருமணம் பற்றி வெளியான செய்தி முற்றிலும் உண்மையானது அல்ல. அந்த மாப்பிள்ளை யார் என்று சொல்லுங்கள் அப்போதுதான் அவரைப் பற்றி எனது வீட்டில் பேச முடியும் எனது திருமணம் பற்றி வெளிவந்த செய்திகள் அனைத்தும் வீண் வதந்திதான்.
எனவே நீங்கள் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. மேலும் எனக்கு தற்போது திருமணத்தில் விருப்பமும் இல்லை.
சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நான் தற்போது திருமணம் செய்து கொள்ளக்கூடிய மனநிலையிலும் இல்லை என்று ரசிகர்களுக்கு பளிச் என்று பதில் சொல்லி பக்காவாக அந்த கிசுகிசுப்பிலிருந்து வெளியே வந்து விட்டார் என்று கூறலாம்.
இதனை அடுத்து ரசிகர்கள் மிக சோகமாகிவிட்டார்கள். அடடா திருமணம் நிச்சயதார்த்தம் ஆகிவிடும் என்று நினைத்திருந்த பச்சை கிளிக்கு இப்போது அது இல்லையா? என்று பலர் சோகத்தில் தாடி வளர்த்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.