தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார். துணிவு படுத்தினை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்புகள் சற்று தாமதமாகவே வெளியானது.
அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான். இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
முன்னதாக விடாமுயற்சி படத்தில் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து அவருடன் ஜோடியாக நடிக்க உள்ளார். அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போடும் நிலையில் டாப் இடத்தில் இருக்கும் ஒருசில நடிகைகள் அஜித்துடன் இதுவரை ஜோடி போடாமல் இருந்து வருகிறார்கள். அதாவது, கும்பிடு போட்டு ஒதுக்கி வரும் சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா. சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகளில் இதுவரை விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் ஜோடி போட்டு இருந்தார். ஆனால், அஜித்துடன் ஜோடியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும், ரஜினி, கமல் போன்ற முன்னணி மூத்த நடிகர்கள் படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் சமந்தா. அதே போல் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜயுடன் சர்க்கார், பைரவா படங்களில் நடித்தார். ஆனால், அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இவர்களை போல் நடிகை அமலாபால், ஸ்ரேயா சரண், ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் அஜித்துடன் இன்று வரை நடிக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.