“ பாவாடை தாவணியில் … எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல..” – VJ தீபிகா !!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா, சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.

தீபிகா ஒருமுறை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஆங்கரிங் பயணம், சீரியல், வெற்றி தோல்வி, குடும்பம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். வீடியோவில் தீபிகா பேசுகையில்; நான் வீட்டுல மூனாவது பொண்ணு. எனக்கும், அக்காவுக்கும் கிட்டத்தட்ட 10 வயசு வித்தியாசம். என் அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் 60 வயசு மேல ஆகுது. நான் மீடியாவுக்கு வர்றதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க.

எந்தவொரு ஃபங்ஷனுக்கு போனாலும், ஏதாவது ஒன்னு கேட்டு அம்மாவ அழ வச்சுடுவாங்க. அம்மா அழுதுட்டே வந்து புலம்புவாங்க. இப்போவே நிறைய பேரு நீ படிச்சிருக்க.. உனக்கு வீடு, குடும்பம் பாக்கணும்னா, நீ படிச்ச வேலைக்கு போலாமே. ஏன் இதை பண்றனு கேட்பாங்க. ஆனா, இது என்னோட ஆசை. அதேநேரத்துல நான் இதுக்காக ஓடுறேன்னு என் அம்மா, அப்பாவையும் விட முடியாது. ரெண்டையுமே பேலன்ஸ் பண்ணனும்.

மீடியாவுக்கு வந்த புதுசுல நிறைய பொய் சொல்லிருக்கேன். நான் சென்னையில ஹாஸ்டல்ல இருந்தேன். என் அம்மா, அப்பா ஊருல இருப்பாங்க. அப்போ லோக்கல் சேனல்ல வேலைப் பாத்தேன். என்னோடது லைவ் ஷோ. நைட் 7-8 வரை ஆஃபிசுல இருக்கணும். அப்புறம்தான் ஹாஸ்டல் வரமுடியும். என்னோட ஸ்டுடியோ தேனாம்பேட்டையில இருக்கும். நான் சூளைமேட்டுல ஹாஸ்டல்ல இருந்தேன். வேலை முடிச்சு, ஹாஸ்டல் வரதுக்கு நைட் 9.30 ஆயிடும். ஆனா நான் வீட்டுல 7 மணிக்கே ஹாஸ்டல் வந்ததா சொல்லிருவேன். என் அம்மா, அப்பா ரொம்ப வெள்ளந்தி. நான் என்ன சொன்னாலும் நம்பிருவாங்க.

ஊருல இருக்கும்போது, சாயங்காலம் 6 மணிக்கு மேல வெளியே போகக் கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா, நான் 10 மணிக்குத்தான் ஹாஸ்டலுக்கு வருவேன். அதுவும் சென்னை புது இடங்கிறதால ரொம்ப பயப்படுவாங்க. என் அம்மா, அப்பாவ கஷ்டப்படுத்தனும், அவங்கள ஏமாத்தனும் எண்ணமெல்லாம் என் மனசுல கிடையாது.

நான் ஆடிஷன் போறதெல்லாம் சொல்லமாட்டேன். ஆனா கிடைச்சதுக்கு அப்புறம், சும்மா காலேஜ் போயிட்டு இருந்தேன்மா, ஸ்டேஜ்ல பேசுறது பாத்துட்டு அவங்களா கூப்பிட்டாங்க. என் ஃபிரென்ட் ஆடிஷன் போனா. நான் அவக்கூட சும்மா துணைக்கு போனேன். என்னையும் ஆடிஷன் கொடுக்க சொன்னாங்க. செலெக்ட் ஆகிட்டேன். இப்படித்தான் சொல்லுவேன். நான் தேடி அலையிறேனு எதுவுமே சொல்லமாட்டேன் என தெரிவித்தார்.

தற்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.”இந்த பொன்ன புடிக்கலனு சொன்னவன் எல்லாம் Line-ல வா..?”என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Poorni

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

7 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

8 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

10 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

11 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

12 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

12 hours ago

This website uses cookies.