கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
கீர்த்தி சுரேஷ்க்கு முதல் படம் தோல்வியானாலும், நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டான போது கோடம்பாக்கத்தில் உள்ள பல நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மீது வன்மத்தை கக்கினார். இது எல்லாம் ஒரு முகமா?.. முழுசா வேகாத முட்ட போண்டா மாதிரி இருக்கு.. என்று பலராலும் விமர்சிக்கப்பட்டார் கீர்த்தி சுரேஷ்.
நடிகர் திலகம் சாவித்திரி எங்கே கீர்த்தி சுரேஷ் எங்கே என்று கடுமையான விமர்சனங்களும் இவர் மீது வைக்கப்பட்டது. அப்படி ஒரு எதிர்ப்புக்கு மத்தியில் தன்னுடைய நடிப்பில் சரியான பதிலடி கொடுத்து அதற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் அந்த சமயத்தில் பெற்றார்.
அதன் பின் உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகையாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். கீர்த்தி சுரேஷை அந்த சமயத்தில் பல நடிகைகள் ஓரங்கட்ட பார்த்ததாக செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.