இனிமேலாவது அப்பா பேச்சை கேளு… ஆசை வார்த்தை சொல்லி அல்வா கொடுத்துட்டாங்க – வருத்தத்தில் அதிதி ஷங்கர்!

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் அதிதி ஷங்கர் மாவீரன் படத்தில் ஒப்பந்தம் ஆகும்போது அவரது ரோல் படத்தில் மிகவும் அழுத்தமான ரோலாக இருக்கும் என சொல்லி ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். ஆனால் படம் வெளியான பிறகு தான் தெரிந்தது. அவருக்கு ஸ்கோப்பே கொடுக்கவில்லை என்பது. இதனால் நம்பி ஏமாந்துவிட்டதாக வருத்தத்தில் உள்ளாராம் அதிதி ஷங்கர். அதுமட்டும் அல்லாமல். மாவீரன் படத்தில் கமிட்டானது அப்பா ஷங்கருக்கு சொல்லாமலே கமிட்டாகி நடித்து வந்தாராம் அதிதி. இதுவே ஷங்கருக்கு பிடிக்கவில்லையாம். எனவே யார் என்ன சொன்னாலும் பச்ச மண்ணா நம்பி நடித்து வரும் அதிதி இனிமேலாவது அப்பா பேச்சை கேளுங்க கதையை அவர்கிட்ட சொல்லிட்டு அப்புறம் நடிங்க என பலர் கூறியுள்ளனர்.

அதேபோல், இரண்டாம் மகள் அதிதி டாக்டர் பட்டம் முடித்த பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் அடம் பிடித்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் தற்போது நடித்து உள்ளார். ஆனால், ஒப்பந்தம் ஆனதே சங்கருக்கு தெரியாது என்றும், சினிமாவே வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அப்பா பேச்சை கேட்காமல் தனது முடிவை எடுத்து வருகிறாராம் அதிதி. இப்படி இருமகள்களை நினைத்து நிம்மதி இல்லாமல் தவித்து சினிமாவில் நாட்டம் இல்லாமல் இருந்து வருகிறாராம் ஷங்கர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Ramya Shree

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

5 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

5 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

7 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

7 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

8 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

8 hours ago

This website uses cookies.