அவர் தூக்கு போட்டு செத்துட்டார்… சிம்பு – ஐஸ்வர்யாவுக்கு இருந்தது குப்பை காதல் – ரஜினி கூறிய உண்மை!
Author: Shree10 April 2023, 7:39 pm
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சென்ற வருடம் திடீரென தாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறினார்கள்.
ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் சிம்புவை உருகி உருகி காதலித்தது ஊரறிந்த உண்மை. அதன் பின்னர் அப்பா பேச்சுக்கு கட்டுப்பட்ட ஐஸ்வர்யா சிம்புவை உதறித்தள்ளிவிட்டு தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இப்படியான நேரத்தில் தான் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக இருவரும் அறிவித்து அதிர்ச்சியளித்தனர். இதில் உண்மை என்னவென்றால் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவே இல்லையாம். ‘

தனியாக வாழப்போகிறோம் என்று தான் இருவருமே கூறினார்களே தவிர விவாரத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை. ஓரிரு வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களாம். இது இப்படி இருக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா சிம்புவை பிரிந்து தனுஷை திருமணம் செய்ததை குறித்த கேள்விக்கு பதிலளித்தது தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, மகள் ஐஸ்வர்யா சிம்புவை காதலித்ததாகவும் அதன்பின் வேறொரு தொழிலதிபரின் மகனை காதலித்ததாகவும் ஆனால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டதகாவும் என்றும் கூறினார் என்று பயில்வான் ரங்கநாதன் தற்போது கூறியுள்ளார். அதெல்லாம் புதைந்து போன குப்பை அதை எல்லாம் இப்போ கிளரவேண்டாம் என அவரே ஆரம்பித்து கொளுத்திப்போடு பரபரப்பை ஏற்படுத்தி பேச்சை முடித்துக்கொண்டார்.