அழகு என்றால் அவள் தானா..! ‘பர்த்டே பேபி’ ஐஸ்வர்யா ராய் குறித்த சில தகவல்கள்..!

இன்று ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாள். தனது 49 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறு வருகின்றனர்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நம்ம நாட்டு பொண்ணு தான் ஐஸ்வர்யா ராய். கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்ட ஐஸ்வர்யா ராய், 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். இதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கோலிவுட், பாலிவுட்டில் அறிமுகமான ஐஸ்வர்யா பச்சன் இதை தொடர்ந்து பல மொழி பட வாய்ப்புகளையும் பெற்றார்.

முதல் முதலில் இவர் இருவர் என்னும் படத்தில் தான் நடித்திருந்தார். புஷ்பவல்லி/ கல்பனா என இருவேறு வேடங்களில் தோன்றியிருந்தார் ஐஸ்வர்யா. மணிரத்தினத்தின் இயக்கமான இந்த படம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டிருந்தது. இதில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், ரேவதி, கௌதமி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இதை தொடர்ந்து ஜீன்ஸிலும் இரட்டை வேடங்களில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். மதுமிதா / வைஷ்ணவி என இரண்டு வேடங்களில் வந்து ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருந்தார். பின்னாள்களில் தமிழை விட பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலேயே அதிகமாக வாய்ப்பு கிடைத்தது. அங்கு பல விருதுகளையும் வென்றெடுத்தார் ஐஸ்வர்யா ராய்.

மீண்டும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மூலம் தமிழ் உலகிற்கு திரும்பி வந்த இவர் பாலிவுட் பக்கம் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். அதோடு ஹாலிவுட்டிற்கு சென்ற இவர் அங்கும் சில படங்களில் தோன்றியுள்ளார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் ஆகிய படங்களை ஒரே ஆண்டில் நடித்து முடித்தார். இந்த இரண்டு படங்களிலும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பாராட்டுக்குள்ளானது.

இதை தொடர்ந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி / மந்தாகினி தேவி என்னும் இரு வேறு வேதங்கள் தரித்த தனது நடிப்பின் முத்திரையை பதித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

இவரது நடிப்பு வெகுவாகவே பாராட்டுக்குள்ளானது. அதோடு இந்த கதையின் மையப்புள்ளியே இவரை சுற்றித்தான் செல்கிறது. இதனால் இரண்டாம் பாகத்தில் நந்தினியும்/ மந்தாகினியும் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முன்னணி நடிகையாக இருந்த பொழுதே அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சன் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு காதல் கரம் பிடித்தார் ஐஸ்வர்யா ராய். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.திருமணத்திற்கு பிறகு படங்களிலிருந்து சற்று ஒதுங்கிய இருந்த ஐஸ்வர்யா ராயின் ரீ – என்ட்ரி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக தகவல் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாள். தனது 49 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறு வருகின்றனர்.

Poorni

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 days ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

2 days ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

2 days ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

2 days ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

2 days ago

This website uses cookies.