நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் என பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் தன் வீட்டில் வேலை பார்க்கும் மூன்று பேர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக அந்த புகாரில் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் தீவிர தேடுதல் விசாரணைக்கு பின் கணவன் மனைவி என ஐஸ்வர்யா வீட்டில் வேலைபார்த்த ஜோடி திருடர்கள் பிடிபட்டுள்ளனர்.
ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வரும் ஈஸ்வரி என்பவர் தன் கணவர் வெங்கட் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்று வீடுகள் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தான் நடிகைகளை வைத்து இருக்கிறார்.
இது பணிப்பெண் ஈஸ்வரிக்கு தெரியுமாம். அவர் அங்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிறுக சிறுக தன் கணவரின் உதவியுடன் நகைகளை கொள்ளையடித்து அதை பணமாக மாற்றி செலவழித்து வந்துள்ளனர்.
அதையடுத்து அவர்களை அழைத்து விசாரித்ததில், இவ்வளவு பெரிய வீட்டில் வேலை பார்க்கும் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு தகுந்த சம்பளத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள். அப்படியிருந்தும் ஏன் திருடினீர்கள் என்ன காரணம்? என்ற கேள்விக்கு “ஐஸ்வர்யா அம்மா எனக்கு ரூ. 30 ஆயிரம் மாத சம்பளம் கொடுத்தார்கள். அது எனக்கு பத்தல. அத வச்ச நான் எப்புடி குடும்பம் பண்றது?
அதனால் எனக்கு தேவைப்படும் போதெல்லாம் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்துவந்தேன். அது அவர்கள் கவனிக்கவில்லை பின்னர் நாட்கள் செல்ல செல்ல பெரிய திருட்டு வேளைகளில் ஈடுபட்டேன் என்றார். அவர்கள் வீட்டு லாக்கர் சாவி என்னிடம் தான் இருக்கும் அதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது சவுகரியமாக நகைகளை திருடினேன்.இன்னும் இருந்திருந்தால் இன்னும் திருடியிருப்பேன் என திமிராக பாலி அளித்தாராம். இதை கேட்டதும் நெட்டிசன்ஸ், வீட்டு வேலை செய்யும் உனக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் கொடுத்தும் பத்தலயா? நன்றி கெட்ட நாய் என எல்லோரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.