ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு ஜனவரி 17ந் தேதி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.
இதனால், ஆரம்பத்தில் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐஸ்வர்யா தனுஷூடன் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக மாறன் படப்பிடிப்பு நடந்த போது அவர் தங்கிய அதே ஓட்டலியே ஐஸ்வர்யாவும் தங்கினார். ஆனால், அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.
தனுஷின் பிறந்தநாளில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் நடக்காமல் போனது. யாத்ரா மற்றும் லிங்காவிற்கான இருவரும் விவாகரத்து செய்யாமல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் இருக்கின்றனர். இருந்தாலும், அம்மா, அப்பா பிரிந்து இருப்பது குழந்தைகளுக்கு நிச்சயம் பெரிய வலியாகவே இருக்கும்.
மகளை நினைத்து வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல ஐஸ்வர்யா, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்து ஓராண்டாகி உள்ளது. ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்தும், புத்தகம் வாசித்தும் தனது கவலையை மறந்துள்ளார்.
10 ஆண்டுகளாக தான் தொடர்ந்து வரும் புத்தகம் படிப்பதை இன்னும் நிறுத்தவில்லை, சிறுவயதில் இருந்தே வாசிப்பு என்பது என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. தி சீக்ரெட் என்ற புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு காரில் செல்லும் போது கூட படித்தவாறு செல்கிறேன் என்ற பதிவினை பகிர்ந்துள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.