நகுல் எங்க கிட்ட பேசாததுக்கு காரணம் ரஜினி பொண்ணுங்க தான்.. ராஜகுமாரன் ஓபன் டாக்..!

சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு தேவயானிக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய சீரியலின் பக்கம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். கோலங்கள் என்ற தொடரில் நடிக்க மிகப்பெரிய பிரபலத்தை அவருக்கு கொடுத்தது.

விக்ரம் மற்றும் தேவயானியை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை இயக்கியபோது, அந்த படப்பிடிப்பில் தான் ராஜகுமாரின் அன்பு அமைதி உழைப்பு பார்த்து தான் தேவயானிக்கு ராஜகுமார் மீது அதிக காதல் ஏற்பட்டதாகவும், ராஜகுமாரின் மீது இருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணம் என தேவயாணி தெரிவித்து உள்ளார்.

அதன்பிறகு தேவயானி குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். ஆனால் தற்போது வரை தேவயானியின் தம்பி நகுல் ராஜகுமாரனிடம் பேசியதே கிடையாது என்றும், அதுமட்டுமல்லாமல் நகுல் தேச விரோதியைப் பார்ப்பதைப் போல ராஜகுமாரனை வெறியோடு பார்ப்பதாகவும், மேலும், தேவயானி குடும்பத்தில் யாரும் தன்னிடம் பேசுவதில்லை என ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மேலும், லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆசிரம பள்ளியில் நகுல் படித்ததாகவும், ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய நண்பர்கள் என்றும், தேவயானி திருமணத்தின் போது, அவர்கள் நகுலை கிண்டல் செய்திருக்க கூடும். சிறிய பையன் என்பதால் அதனை அவமானமாக எண்ணி இன்னும் என்னிடம் பேசாமல் இருக்கக்கூடும் என்று ராஜகுமாரன் தனது யூகத்தை தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

58 minutes ago

என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…

நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…

59 minutes ago

அந்த தியாகி யார்? டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கவனத்தை ஈர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…

2 hours ago

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

2 days ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

2 days ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

This website uses cookies.