தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் படங்களில் நடிப்பதோடு சரி எந்த பொது நிகழ்ச்சிக்கோ, திரைப்படம் சார்ந்த விழாக்களிலோ பங்கேற்கவே மாட்டார். இதனை அவர் தனது கொள்கையாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இதனை சிலர் பாராட்டினாலும் பெருவாரியான ஜனங்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், விமானத்தில் இது குறித்து ஒரு நபரிடம் அஜித் பேசியிருக்கிறார். அதாவது, இன்டர்வியூ மற்றும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வதில்லை என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, பதில் அளித்த அஜித் ரசிகனாக இருக்கலாம் ரசிகனாக மட்டுமே இருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். என் படம் வெளியாகிறது என்று அதற்கு சில நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விடுகிறார்கள். அது எனக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.
அப்போது, அவர்களுடைய நேரத்தை என்னுடைய படத்திற்காக செலவு செய்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்காக அவர்களுடைய நேரத்தை ஒதுக்குகிறார்கள். அப்படி செய்யக்கூடாது நான் நடிக்கிறேன் நான் சம்பாதிக்கிறேன் எனது குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அதேபோலத்தான் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. முதலில் அவர்களுடைய குடும்பம் குழந்தைகளை பார்க்க வேண்டும். என்னை ஒரு நடிகனாக மட்டுமே பாருங்கள். ஒரு ரோல் மாடலாக என் ரசிகர்கள் என்னை பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். இதுவே, அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுக் கொள்ளாததற்கு காரணம் என கூறியுள்ளார்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.