அஜித் அணி துபாய் 24Hகார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பந்தயத்தில் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொண்டு,துவண்டு போகாமல் அஜித் தனது அணியுடன் பங்குபெற்றார்.
இதையும் படியுங்க: நம்ம ஜெயிச்சுட்டோம் நண்பா…ஆனந்த கண்ணீரில் அஜித்…துபாய் 24H கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் அணி..!
நேற்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கிய இந்த பந்தயம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இதில் அஜித்குமாரின் அணி 911 GT3 R என்ற பிரிவில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியது.இந்த வெற்றி மூலம் அஜித் நம் இந்திய நாட்டிற்கே பெருமை சேர்ந்துள்ளார்,அதுமட்டுல்லாமல் இனி வருங்காலங்களில் கார் ரேஸில் இந்திய நாடும் மகத்தான பங்களிப்பை அளிக்கும் என ஆணித்தரமான முத்திரையை அஜித் இந்த வெற்றி மூலம் மற்ற நாடுகளுக்கு கூறியுள்ளார்.
இந்த மகத்தான வெற்றியை அஜித் துள்ளி குதித்து,தேசிய கொடியை கையில் ஏந்தி அங்கிருந்த ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து நன்றி தெரிவித்தார்.மேலும் அங்கிருந்த அஜித் மனைவி ஷாலினி மற்றும் அவரது குழந்தைகள்,நடிகர் மாதவன் என பலர் அஜித்துக்கு வாழ்த்துக்களை கூறி உற்சாகம் அடைந்தனர்.
ஒட்டுமொத்த அரங்கமே AK சத்தத்தால் அதிர்ந்தது.பின்பு பரிசு வாங்க மேடை ஏறிய அஜித் அணி,பெருந்தன்மையாக தனது அணியின் மற்ற வீரர்களை முதலில் மேடை ஏற வைத்து,பின்பு அஜித் இந்திய நாட்டுடைய தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு,தனது மகனையும் அழைத்து பரிசை வாங்கினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் கடின உழைப்பை பாராட்டி வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்,மேலும் GT 4 பிரிவில் SPRIT OF THE RACE என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த வெற்றியின் மூலம் அஜித் அடுத்து ஐரோப்பாவில் நடைபெறும் ரேஸில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.