தமிழ் சினிமாவில் அஜித்-விஜய் ரசிகர்கள் தான் முக்கியமாக பார்க்கப்படுபவர்கள். அவர்கள் அவர்களின் ஆசை நாயகனுக்காக செய்யும் விஷயங்களை பார்த்து தான் மற்ற பிரபலங்களின் ரசிகர்களும் செய் வருகிறார்கள். முன்னதாக எம்ஜிஆர், சிவாஜி ரஜினி, கமலுக்கு அடுத்து தொடர்ந்து வருவது அஜித் விஜய் ரசிகர்களின் சண்டைதான்.
எந்த பிரபலங்களின் ரசிகர்களும் போடாத சண்டை எல்லாம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களால் நடந்துவிட்டது. ஒரு காலகட்டத்தில் சமூக வலைதளம் பயன்படுத்தும் அனைவருமே இந்த ரசிகர்களின் நாயகர்கள் இவர்களுக்கு ஏதாவது கூறலாமே கண்டுகொள்ளலாமே என புலம்பியுள்ளனர்.
அந்த அளவிற்கு இவர்களின் சண்டை ஒரு காலத்தில் பயங்கர பிரச்சினையாகவே சமூக வலைதளங்களில் மாறி இருந்தது. ஆனால், இப்போது புயல் பாதிப்பில் இருக்கும் மக்களுக்கும் இவர்களின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து உதவி செய்தார்கள். ஆனாலும், இவர்களுக்குள் சில சண்டைகளும் வரத்தான் செய்கிறது. இவர்கள், தனித்தனியாக படங்களில் நடித்தாலே படம் செம மாஸாக இருக்கும் ஒன்றாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற கனவு ரசிகர்களிடம் உள்ளது.
ஆனால், இந்நிலையில் விஜய் அரசியல் வருகை குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில், விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இதுதான் என்று பல பெயர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இப்படி இருக்க விரைவில் நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை பதிவிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், இதற்கும் அஜித்திற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்க தோன்றுகிறது. அதாவது, விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகிறதே, அதே நாளில் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட பட குழுவும் திட்டமிட்டு வருவதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் குண்டை தூக்கி போட்டு உள்ளார். அதாவது, விஜய்யின் அரசியல் பேச்சு காட்டுத்தைப் போல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், அதை தண்ணீர் ஊற்றி அணைப்பதாக விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பது போல் அந்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, வெளிவந்த தகவலின் படி விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீரென தற்போது இப்படி ஒரு செய்தியை அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இதனை என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
This website uses cookies.