தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கக்கூடிய அஜித், கடந்த மார்ச் மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளியானது. இதன் பின்னர், அவர் நலமுடன் இருக்கிறார் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார் என்று அவ்வப்போது அப்டேட்டுகளும் வந்தன.
இந்த நிலையில், தற்போது அஜித் கைவசம் உள்ள இரண்டு திரைப்படங்கள் ஆன விடாமுயற்சியை முடித்தபின்னர் குட் பேட் அக்லி படத்தையும் கையோடு முடித்துவிட்டு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறாராம்.
அஜித்துக்கு கடந்த மார்ச் மாதம் நடந்த அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக தான் இதுவும் நடக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும், மார்ச் மாதம் நடந்த அறுவை சிகிச்சை அப்போதைய சூழ்நிலைக்கு சரி செய்துள்ளனர். ஆனால், அது முழுமையாக குணமடைய வேண்டும் என்றால், இந்த அறுவை சிகிச்சையை கண்டிப்பாக அஜித் செய்து கொள்ள வேண்டுமாம்.
எனவே, கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த அறுவை சிகிச்சையை செய்ய அஜித் முடிவு செய்துள்ளார். மேலும், இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், ஒரு வருடம் ஓய்வில் இருக்கப் போகிறாராம். அதனால், அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு பக்கம் விஜய் இன்னொரு பக்கம் அஜித் என சினிமாவில் இல்லாமல் போவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாகியுள்ளது. அதனால், அஜித் ஆபரேஷன் எல்லாம் முடித்துவிட்டு சீக்கிரம் வரவேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒரு வருடம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஷாக் ஆன செய்தியாகவே இருக்கிறது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.