தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் வடகிழக்கில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளது.
‘மிக்ஜாம்’ புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை விடாமல் பெய்து வந்தது.
இந்நிலையில், அரசும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து இரவு பகல் பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. பிரபலங்கள் அரசு தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல், பிரபலங்களில் சூர்யா, கார்த்திக், ஹரிஷ் கல்யாண் நிதியுதவி செய்ய விஜய் ரசிகர்கள், நடிகர் பார்த்திபன் ஆகியோர் களத்தில் இறங்கி உணவுகளை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், ரசிகர்கள் பலரும் அஜித் ஒரு உதவியும் செய்யவில்லை என கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால், அஜித் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் தனது நண்பர்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறாராம். இந்த தகவல் தற்போது வெளியாக ரசிகர்கள் அஜித் எப்போதும் தான் செய்யும் விஷயங்களை மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என நினைக்க மாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.