துப்பாக்கி சுடுதலில் கடந்த இரண்டு வருடங்களாக அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித், கடந்த 27 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றார்.
இதை அறிந்த ரசிகர்கள் அங்கு அவரை காண குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித் வருகையை அறிந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றதால் ரசிகர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும் ரசிகர்களை கட்டுப்படுத்துவது குறித்து அஜித்திடம் போலீசார் ஆலோசனை செய்தனர். அப்போது அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு எந்த பிரச்னையும் வர கூடாது என காவல் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டது மட்டுமின்றி, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார்.
திருச்சி ரெயில் கிளப் நிகழ்வு குறித்து காவல்துறை ஆணையர் ஸ்ரீதேவி கூறுகையில், “உண்மையில் அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன் ரசிகர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, என கூறியதோடு… நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை செய்கிறேன் எனக் கூறி ரசிகர்களை கட்டுப்படுத்த எனக்கு எல்லா ஒத்துழைப்பும் கொடுத்தார். இறுதியில் அனைத்து காவலர்களிடமும் நன்றி கூறி விடை பெற்றார் என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் அஜித் தன்னை காண திருச்சி ரைபிள் கிளப் வாசலில், ஆயிரத்திற்கும் மேல் கூடிய ரசிகர்களை ஏமாற்ற மனமின்றி, ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடிக்கு சென்று அங்கிருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்ததோடு மட்டுமின்றி தம்ப்ஸ் அப் செய்து கைகூப்பி நன்றியும் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.