தன்னுடைய அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார்.இவர் நடிப்பை தாண்டி பைக்,கார் ரேஸ்,துப்பாக்கி சுடுதல்,புகைப்படம் எடுத்தல்,குக்கிங் என பல வித திறைமைகளை கையில் வைத்திருப்பவர்.
இதையும் படியுங்க: ‘நாட்டாமை’ படத்தில் மிச்சர் சாப்பிட்ட நபர் யார்..? கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரசிய தகவல்.!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும்,எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்கி அதில் வெற்றி நடை போட்டு வருகிறார்,மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கு அடிக்கடி அறிவுரைகளை கூறியும் வருகிறார்.
சமீபத்தில் கூட துபாய் கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்களுடைய வேலையை முதலில் நேசியுங்கள் என கூறியிருந்தார்.தற்போது சினிமா,கார் ரேஸ் என கலக்கி வரும் நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருதை அறிவித்து கௌரவித்தது.
அஜித் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்து வருவார்,இவருடைய உதவியை பெரும்பாலும் வெளியே சொல்ல மாட்டார்,இந்த நிலையில் தற்போது அஜித் செய்து வரும் மிகப்பெரிய ஒரு நற்செயல் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில்,அஜித் வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி வரை ஆசிரமத்திற்கு கொடுத்து பலருடைய வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறார்,இதனால் சுமார் 20000 நபர்கள் அஜித் அளிக்கும் நன்கொடையால் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.இப்போ இருக்கிற காலகட்டத்தில் பலர் தாங்கள் செய்கின்ற உதவியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பெயரை சம்பாதித்து வரும் சூழலில்,அஜித் சைலண்டாக பலருடைய வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வருகிறார்.
இவர் ஏற்கனவே தன்னுடைய வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாதிரி பல நல்ல நல்ல விசயங்கள் அஜித் வாழ்க்கையில் இருந்து வருவதால்,ரசிகர்கள் அவரை கடவுளுக்கு நிகராக வைத்து கொண்டாடி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.