அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகுதான் அவர் திரைப்படங்களில் நடிப்பது குறித்தான முடிவுகளை எடுப்பார் என கூறப்படுகிறது.
அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாக அது பரபரப்பாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சினிமா சார்ந்த ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை “புஷ்பா” இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளதாக ஒரு செய்தியை பகிர்ந்தாராம். அந்த குழுவில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவும் இருந்தாராம்.
அப்பத்திரிக்கையாளர் அந்த தகவலை பகிர்ந்ததும் சுரேஷ் சந்திரா, “இல்லை, இப்படி ஒரு செய்தி அடிப்படையற்றது. இதில் உண்மை இல்லை” என அந்த செய்தியை மறுத்துள்ளாராம். “சுரேஷ் சந்திரா பதறுவதை பார்த்தால் ஒரு வேளை இந்த செய்தி உண்மையாக இருக்குமோ?” என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
This website uses cookies.