நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி பல்வேறு துறைகளில் தன்னுடைய கால் தடத்தை பதித்து சாதனை புரிந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் துபாய் 24H கார் ரேஸில் தனது அணியுடன் கலந்து கொண்டு 3 வது இடத்தை பிடித்து அசத்தினார்.
அவரது வெற்றியை உலகம் முழுவதும் இருக்க கூடிய ரசிகர்கள் கொண்டாடியது மட்டுமின்றி,கார் பந்தயத்தில் இந்தியாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.மேலும் அவருக்கு திரை பிரபலங்கள்,அரசியல்வாதிகள் என பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த சூழலில் மத்திய அரசு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.அதில் 7-பத்ம விபூஷண்,19 பத்ம பூஷன்,113 பத்ம ஸ்ரீ உட்பட மொத்தம் 139 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் கலைத்துறையில் நடிகர் அஜித்துக்கு ஒன்றிய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.இந்த அறிவிப்பால் நடிகர் அஜித் குமார் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.
இதையும் படியுங்க: போலீசாரால் என் வாழ்க்கையை போச்சு…நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் நடந்த குளறுபடி…இளைஞன் பரபரப்பு பேட்டி..!
அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தன்னுடைய விடாமுயற்சியால் அவர் இந்த விருதை தட்டி பறித்துள்ளார்.இந்த விருது அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.மேலும் நடிகர் அஜித் பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த விருதில் எனது பின்னால் பலரது உழைப்பு உள்ளது என கூறியுள்ளார்.மேலும் அவர் என்னுடைய தந்தை இப்போது இருந்தால் மிகவும் சந்தோசம் அடைந்திருப்பார்,எனது அம்மாவின் தியாகங்களுக்கும் அன்பிற்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் கடந்த 25 வருடமாக எனது மனைவி ஷாலினி எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்துள்ளார்,என்னுடைய குழந்தைகளுக்கும் நன்றி என கூறியுள்ளார்.
என்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உள்ளது என ரொம்ப எமோஷனல் ஆக பதிவிட்டுள்ளார்.நடிகர் சிவாஜிகணேசன்,கமல்ஹாசன்,ரஜினிகாந்த்,விஜயகாந்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் 5-வது முறையாக பத்ம பூஷன் விருதை மகுடம் சூட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
This website uses cookies.