அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும் தீராத ஆசை உண்டு. அவர் சினிமாவிற்கு நடிக்க வந்ததே கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான தொகையை சம்பாதிப்பதற்குத்தான் என்று பலரும் கூறுவது உண்டு.
அதுமட்டுமல்லாது விமான ஓட்டுநருக்கான உரிமத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் நடிகர் அஜித்தான். இது போக துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிப்பெற்று அதற்கான போட்டிகளிலும் கலந்துகொண்டார். இவ்வாறு இந்திய சினிமாக்களிலேயே மிகவும் தனித்துவமான நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார்.
கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பத்ம பூஷன் விருதுகளின் பட்டியலில் அஜித்குமாரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவரைப் போலவே நடிகை ஷோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் நடிகர் அஜித்குமார் நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கைகளால் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார். அதே போல் முன்னணி தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவும் பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்டார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
This website uses cookies.