தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நடிகராக இருப்பவர் அஜித் குமார்.இவர் தற்போது சினிமா மற்றும் தன்னுடைய கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இவருடைய கார் ரேஸில் பயிற்சி செய்த வீடியோ வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.அதன் பின்பு ரொம்ப நாளாக எந்த அப்டேட்டும் வராமல் இருந்த விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக வலைத்தளங்களை திணறடித்தது.
அடுத்தடுத்து விடாமுயற்சி,குட் பேட் அக்லி படங்கள் திரைக்கு வந்து அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்த உள்ளன.
இதற்கிடையில் சமீப காலமாக மூலை முடுக்கெல்லாம் நடிகர் அஜித்தை ரசிகர்கள் “கடவுளே அஜித்தே” என்று கோஷம் எழுப்பி கொண்டாடி வந்தனர்.குறிப்பாக இளைஞர்கள் சிலர்,மக்கள் கூட்டம் இருக்கும் இடமான திரையரங்கு,பொதுநிகழ்ச்சிகள் போன்ற இடங்களில்,இந்த கோஷத்தை எழுப்பி வந்து,பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தனர்.
இந்த அநாகரிக செயலை கண்டித்து அஜித்,தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என்னுடைய பெயரைத் தவிர்த்து,என் பெயருடன் வேற எந்த அடைமொழியோ சேர்த்து கூப்பிடுவதை நான் ஒரு போதும் விரும்புவதில்லை.
இதையும் படியுங்க: புஷ்பா 2 வசூலில் கொல மாஸ்..1000 கோடியை தட்டி தூக்கிய அல்லு அர்ஜுன்…படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்..!
இத்தகைய அநாகரீக செயலை,ரசிகர்களாகிய நீங்கள் நிறுத்த வேண்டும்.இது என்னுடைய அன்பான வேண்டுகோள் என தெரிவித்துள்ளார்.முதலில் உங்கள் குடும்பத்தை பார்த்து,சட்டத்தை மதித்து ஒழுங்கான குடிமகனாக இருங்கள் என அறிவுரையும் கூறியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு தல என்று என்னை கூப்பிட வேண்டாம்னு சொல்லிருந்த நிலையில்,அஜித்தின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் மனதில் ஏற்றி கடைப்பிடித்தால் எல்லோருக்கும் நல்லது,என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.