தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர், அவரது கதை பிடிக்காததால் AK62 மகழ் திருமேனியிடம் கொடுக்கப்பட்டது.
இப்படம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பல மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். பின்னர், அஜித்தின் பிறந்தநாள் அன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் AK62 டைட்டில் “விடாமுயற்சி” என அறிவிக்கப்பட்டது.
தற்போது, அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. மேலும், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளம் வழங்கியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது.
அதாவது, அஜித்தின் ரசிகரும் பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் 63வது படத்தை இயக்க உள்ளாராம். மேலும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படத்திற்கான சம்பளம் 170 கோடி வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, கிடைத்த தகவலின்படி இப்படத்தில் நடிக்க அஜித்துக்கு 163 கோடி தான் சம்பளமாக வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது உறுதியான தகவல் என்றும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.