சஞ்சயிடம் பேசிய அஜித்.. தந்தையாக விஜய் கூட இதை செய்யவில்லை..!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.

இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை தற்போது சைலெண்டாக லைக்கா நிறுவனம் போட்டுள்ளார்களாம். அந்த பூஜையில் விஜய் பங்கேற்காததை வைத்து பலர் கண்டபடி செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் யார் மற்ற நடிகர்கள் யார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை வெளிவந்த தகவலின் படி கவின் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது. மேலும், இப் படத்திற்கான பிஆர்ஓவாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

விஜயின் மகன் படத்திற்கு எப்படி நாம் பிஆர்ஓவாக இருப்பது என முதலில் சுரேஷ் தயங்கியுள்ளார். பின்னர் அஜித்துடன் இதுகுறித்து பேசியுள்ள அவர் இதற்கு அஜித் தாராளமாக போய் பண்ணுங்க எனக்கு கூறினாராம். அதுமட்டுமின்றி சுரேஷ் சந்திராவிடம் விஜயின் மகன் சஞ்சையின் போன் நம்பரை வாங்கி கால் செய்து பேசியுள்ளார். அப்போது, அறிமுகப்படத்திற்காக தனது வாழ்த்துக்களையும் சஞ்சயிடம் அஜித் கூறியுள்ளார்.

சஞ்சையின் புதிய பட அறிவிப்பு வெளிவந்த பின்னர் விஜய் இதுவரை தனது சமூக வலைதளத்தில் அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ இதுகுறித்து பேசவில்லை. இதனால், சினிமாவில் தனது கேரியரை துவங்கும் தனது மகனுக்கு விஜய் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் தனது மகனுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்ததாக, இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை அது குறித்து இதுவரை தகவல் வெளிவராமல் இருப்பதற்கு வேறு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்குமோ என இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தற்போது பகிர்ந்து கொண்டார்.

Poorni

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

52 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

57 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

2 hours ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

3 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

4 hours ago

This website uses cookies.