சஞ்சயிடம் பேசிய அஜித்.. தந்தையாக விஜய் கூட இதை செய்யவில்லை..!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.

இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை தற்போது சைலெண்டாக லைக்கா நிறுவனம் போட்டுள்ளார்களாம். அந்த பூஜையில் விஜய் பங்கேற்காததை வைத்து பலர் கண்டபடி செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் யார் மற்ற நடிகர்கள் யார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை வெளிவந்த தகவலின் படி கவின் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது. மேலும், இப் படத்திற்கான பிஆர்ஓவாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

விஜயின் மகன் படத்திற்கு எப்படி நாம் பிஆர்ஓவாக இருப்பது என முதலில் சுரேஷ் தயங்கியுள்ளார். பின்னர் அஜித்துடன் இதுகுறித்து பேசியுள்ள அவர் இதற்கு அஜித் தாராளமாக போய் பண்ணுங்க எனக்கு கூறினாராம். அதுமட்டுமின்றி சுரேஷ் சந்திராவிடம் விஜயின் மகன் சஞ்சையின் போன் நம்பரை வாங்கி கால் செய்து பேசியுள்ளார். அப்போது, அறிமுகப்படத்திற்காக தனது வாழ்த்துக்களையும் சஞ்சயிடம் அஜித் கூறியுள்ளார்.

சஞ்சையின் புதிய பட அறிவிப்பு வெளிவந்த பின்னர் விஜய் இதுவரை தனது சமூக வலைதளத்தில் அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ இதுகுறித்து பேசவில்லை. இதனால், சினிமாவில் தனது கேரியரை துவங்கும் தனது மகனுக்கு விஜய் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் தனது மகனுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்ததாக, இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை அது குறித்து இதுவரை தகவல் வெளிவராமல் இருப்பதற்கு வேறு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்குமோ என இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தற்போது பகிர்ந்து கொண்டார்.

Poorni

Recent Posts

சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…

12 minutes ago

பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!

சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…

17 minutes ago

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

This website uses cookies.