அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி, தமிழ்நாட்டை விட பீகாரில் இதனைக் காண ஆர்வமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை: அஜித்குமார் சொன்னது போல் விடாமுயற்சி திரைப்படம் வெளியான இன்று தான் அவரது ரசிகர்களுக்கு பொங்கம் பண்டிகை போல, ஏனென்றால், விடமுயற்சி வெளியான அனைத்து தியேட்டர்களிலும் அஜித் ரசிகர்கள், பட்டாசு வெடித்து, பிரமாண்ட கட்-அவுட்களுக்கு மாலையிட்டு, மேளம் அடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், விடாமுயற்சி படத்தின் விமர்சனங்களும் ரசிகர்கள் வாயிலாக நேர்மறையாகவே உள்ளது. இதனிடையே, இதுபோன்ற திரைவிமர்சனங்களுக்கு மத்தியில் சில கலவையான விமர்சனங்களும் வந்து செல்கின்றன. எது எப்படி இருந்தாலும் அஜித்குமாரின் திரை தரிசனத்திற்காக ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக சென்று வந்தனர்.
இந்த நிலையில், Sacnilk வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, மொத்தம் 7 லட்சத்து 15 ஆயிரத்து 631 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 13.39 கோடி ரூபாய் முன்பதிவு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேநேரம், விடாமுயற்சி படத்திற்கு 9 மணி சிறப்புக் காட்சிக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது.
ஆனால், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகாலைக் காட்சிகளும் வெளியாகியது. இதனால் தமிழ்நாட்டை விட பீகாரில் விடாமுயற்சி படம் வெளியாகி, அங்குள்ள ரசிகர்கள் பேராதரவைத் தருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும், இப்படம் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் மாஸ் காட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Vidaamuyarchi Twitter review: சாதித்தாரா அஜித்குமார்? விடாமுயற்சி விமர்சனம்!
மகிழ் திருமேனி இயக்கி உள்ள இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். அனிருத் இசையில் வெளியான பத்திக்குச்சு மற்றும் Sawadika ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.