விக்னேஷ் சிவனை தொடர்ந்து மகிழ் திருமேனியுடன் அஜித் சண்டை – டிராப் ஆகுமா “விடாமுயற்சி”?

Author: Rajesh
2 January 2024, 10:39 am

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

vidamuyarchi

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். இதனால் படத்தின் ஷட்டிங் ஆரம்பிப்பார்களா? இல்லையா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றது.

பின்னர் அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். அஜர்பைஜானில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,படக்குழுவினர் திடீரென சென்னை திரும்பினர். பின்னர் மீண்டும் அஜர்பைஜானில் நாட்டில் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இதனிடையே அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி தல ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனிக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவிற்கும் இடையே வேலைப்பணிகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு இடையிலேயே நீரவ் ஷா வெளியேறிவிட்டாராம். பின்னர் அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் புதிய ஒளிப்பதிவாளராக விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆனால், அஜித்திற்கு ஓம் பிரகாஷ் பணிகளில் திருப்தியில்லாததால் இயக்குனர் மகிழ்திருமேனியிடம் மனக்கசப்பு ஏற்பட்டதாம்.

அத்துடன் மகிழ் திருமேனி வேலைகளை தாமதமாக செய்து வருகிறாராம். அதாவது, பிப்ரவரி இறுதி வரை மட்டுமே அஜித் கால்ஷீட் கொடுத்திருக்கும் நிலையில் தற்போது வரை வெறும் 50% படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம். இதனால் உடனடியாக தயாரிப்பாளருடன் இதுகுறித்து பேசியுள்ளார் அஜித். அதாவது, பிப்ரவரிக்குள் படத்தை எடுத்துவிடுங்கள். அதற்கு மேல் கால்ஷீட் கொடுக்கமுடியாது என கறாராக கூறிவிட்டாராம். இதனால் மகிழ் திருமேனிக்கு அஜித் மீது மிகுந்த கோபம் ஏற்பட்டுள்ளதாம்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!