புஷ்பா 2 திரையரங்கு பிரச்சனையால் அல்லு அர்ஜுன் தற்போது வீட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.அவரிடம் இன்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு 4 வார ஜாமினில் வெளியே வந்தார்.இந்நிலையில் ஒட்டுமொத்த தெலுங்கானா அரசும்,அல்லு அர்ஜுன் மீது புகார்களை கூறி வந்தனர்.தற்போது அவருடைய பவுன்சர் ஆன ஆண்டனி என்பவரை போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
அதாவது அன்றைய சம்பவத்தின் போது அல்லு அர்ஜுன் சுமார் இரவு 9.15 மணிக்கு தியேட்டருக்கு வந்துள்ளார்.அப்போது தியேட்டருக்கு வெளியே ரசிகர்களை சந்தித்துள்ளார்.உடனே அவரை பார்க்க கூட்டம் அலைமோதியது,இதையடுத்து அவரது பவுன்சர்கள் அங்கிருந்தவர்களை கீழே தள்ளியுள்ளனர்.அதுவே நிலைமையை மோசமாகியுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
மேலும் அவருடைய பவுன்சர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்,அவர்களின் ஒரே கவனம் அல்லு அர்ஜுன் மீது மட்டுமே இருந்தது என போலீஸார் கூறியுள்ளனர்.
அவருடைய முக்கிய பவுன்சரான ஆண்டனி பொதுமக்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக,அவர் மீது புகார் வந்துள்ளது.இதன் அடிப்படையில் அவரை தற்போது போலீஸார் கைது செய்து,விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.