சினிமா / TV

பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!

தெலுங்கானாவில் பரபரப்பு அல்லு அர்ஜுன் வீடு முற்றுகை

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 பிரச்சனையால் ஒட்டுமொத்த தெலுங்கானா தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை தாக்கி வருகிறது.

மிகப்பெரிய வெற்றி படமாக உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தை சந்தோசமா கொண்டாடமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.புஷ்பா 2 முதல் நாள் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ரேவதி என்ற பெண்மணி இறந்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரது மகனும் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் பல ரசிகர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள்,இதற்கு முழு காரணம் அல்லு அர்ஜுன் தான் என குற்றம் சாடி வந்தனர்.இதற்காக ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறை சென்று வந்துள்ள நிலையில்,நேற்று நடந்த தெலுங்கானா சட்டசபை கூட்டத்தில்,அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ஷெட்டி அல்லு அர்ஜுனை பகிரங்கமாக தாக்கி பேசினார்.அவருக்கு இப்போ என்ன ஆகி விட்டது கை,கால் ஏதும் போய் விட்டதா…?அவரது வீட்டுக்கு சென்று ஏன் ஆறுதல் கூறி வருகின்றனர்.நெரிசலில் உயிரிழந்த பெண்மணி வீட்டை பற்றி கவலைப்பட்டீர்களா என்று பேசி இருந்தார்.

மேலும்,முதல் நாள் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார்.அதை போல் தெலுங்கானா மாநில டிஜிபி மற்றும் துணை ஆணையரும் அல்லு அர்ஜுனை எதிர்த்து கேள்விகளை எழுப்பினார்கள்.அதன் பின்பு அவசர அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பை வைத்து அல்லு அர்ஜுன் நடந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்தார்.என் மேல் எந்த தவறும் இல்லை,தயவு செய்து என்னை பற்றி தவறான கருத்தை பரப்பாதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்க: நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!

மேலும் அவருக்கு எதிராக கருத்துக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.அவர் கூட்டிய பிரஸ் மீட்டை கண்டித்து ஏசிபி விஷ்ணுமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.நீதிமன்றத்தி முன் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நடிகர் விசாரணையை பாதிக்கும் வகையில்,பத்திரிகையாளரை சந்தித்து,அவர் நீதிபதி போல் இது தற்செயலாக நடந்தது,என் மேல் எந்த தவறும் இல்லை என்று எப்படி சொல்லலாம் ,இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.

இப்படி பல கோணங்களில் அல்லு அர்ஜுனுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் தற்போது அவரது வீட்டின் முன்பு சில பொதுமக்கள் அல்லு அர்ஜுனை கண்டித்து கோஷங்களை எழுப்பியும்,வீட்டை நோக்கி கற்களை வீசியும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இது அவரது வளர்ச்சியை கண்டு யாரோ போடும் சதித்திட்டம் என அவரது ரசிகர்கள் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

3 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

4 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

5 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

5 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

6 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

7 hours ago

This website uses cookies.