நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.
இதையடுத்து அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்திலே கர்ப்பம் ஆகிவிட்டார். அவ்வப்போது கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அதிகாலையில் கடலோரம் வயிற்றை மடித்துக்கொண்டு குத்தவச்சி உட்கார்ந்து யோகா செய்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,
கர்ப்ப காலத்தில் மலசனாவின் அழகை தழுவும்! இடுப்பு சக்தி மற்றும் மகிழ்ச்சியான அதிர்வுகளுக்கு இந்த குந்துதல் மந்திரம் எனது பயணமாக உள்ளது. நீண்ட கடற்கரை நடைபயிற்சி, வெறுங்காலுடன், சூரிய அஸ்தமனத்தைப் பிடிப்பது கர்ப்ப குமட்டலுக்கு எனது சிறந்த சிகிச்சை. என் கால்கள் மணலையும் உப்புநீரையும் தொடும்போது அது ஒரு அதிசய குணமாக உணர்கிறேன். (குறிப்பு)இந்த ஆசனத்தை செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். ஜகத் தேசாய் என் சிறந்த கணவர் மற்றும் சிறந்த நண்பர், எனது ஓட்டத்தில் நான் இருப்பதைத் தடுக்காமல் என் நடவடிக்கைகளை கவனமாகக் கவனிக்கிறார். அவர் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.