சினிமா / TV

அடிமேல் அடி வாங்கும் அமரன்.. காஷ்மீர் நடிகர் கூறுவது என்ன?

அமரன் திரைப்படத்தில் காஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையைக் காட்டவில்லை என்ற விமர்சனம் எழுவது குறித்து காஷ்மீர் நடிகர் உமைர் பேசியுள்ளார்.

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து இருந்தது. தீபாவளி ரேஸில், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பக்கர் ஆகிய திரைப்படங்களுடன் கோதாவில் குதித்தது. இருப்பினும், முதல் நாளிலேயே 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. இது சிவகார்த்திகேயன் கேரியரில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக அமைந்துள்ளதால், எஸ்கே இதற்காக பல மெனக்கெடல்களை அளித்து உள்ளதாகவும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இதனிடையே, இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து உள்ளதாக அமரன் படத்திற்கு எஸ்டிபிஐ கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக, தேனாம்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்திலும், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடத்தினர். அந்த வகையில், காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை நிதர்சனமாக அமரன் படம் கூறவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.

இது குறித்து, காஷ்மீர் மக்களில் ஒருவரும், அமரன் படத்தில் உமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமைர் என்பவரிடம் பிரபல மாத இதழ் முன்வைத்து. அதற்கு பதிலளித்த அவர், ” இப்போது நீங்கள் ஒரு ராணுவ வீரர், நான் ஒரு பயங்கரவாதி என வைத்துக் கொள்வோம். நான் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து, எனக்கு சாப்பாடு வேண்டும் என்று மிரட்டுறேன். அப்போது அவர்கள் எனக்கு பயந்து சாப்பாடு கொடுப்பார்கள். பின்னர், ராணுவத்துக்கு தகவல் கிடைத்து, அந்த வீட்டுக்கு வருகிறார்கள்.

இதையும் படிங்க : 2k கிட்ஸ்களின் டி.ராஜேந்தர்.. கோபமான ஹிப்ஹாப் ஆதி!

அப்போது, ஏன் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள் என ராணுவ அதிகாரியான நீங்களும் அவர்களை கேள்வி கேட்பீர்கள். மக்களால் எவ்வளவுதான் தாங்கிக் கொள்ள முடியும்? சில நேரம் கல் வீசுவார்கள். இதற்கு முன்பு வரைக்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதுதான் நம்முடைய வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது ஒரு 6 வருடமாக மக்களின் பார்வையும், புரிதலும் மாற்றம் அடைந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.