தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம்.
முன்னதாக விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த புதிதில் சில நடிகைகள் இவருடன் சேர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்தனர். தற்போது அந்த நடிகைகள் யார் என்று பார்ப்போம்.
நதியா:
80களில் பிரபலமான நடிகையாக ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை நதியா. தற்போதும் இளமையுடன் காட்சி அளிக்கும் இவர், பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்று அவருடன் நடிக்க நதியா மறுத்திருக்கிறார்.
ராதிகா:
80 களின் காலகட்டத்தில் நடிகை ராதிகா ரொம்பவும் எதார்த்தமான கதாநாயகியாக வெற்றி கண்டவர். இவர் கமல், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டு இருந்தார். இதனிடையே, ராதிகா விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த பின்னாளில் இவர் அவரோடு ஜோடி போட்டு நடித்தது மட்டுமல்லாமல் இருவரும் காதலித்து திருமணம் வரை அந்த உறவு சென்று நின்றது.
அம்பிகா:
80 மற்றும் 90 களில் முன்னணி ஹீரோக்களே அம்பிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டனர். அந்த அளவுக்கு வசீகரமான தோற்றத்தோடு, சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை அம்பிகா கவர்ந்தவர். ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த அம்பிகா, அதன்பின்னர் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தழுவாத கைகள் திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
ராதா:
80 மற்றும் 90 களின் அன்றைய சினிமாவில் நடிகை அம்பிகாவுக்கு போட்டியாக நடித்தது என்றால் அவருடைய தங்கை ராதா என்று தான் சொல்வார்கள். இவரும் முதலில் விஜயகாந்துடன் நடிக்க மறுத்து பின் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம், மீனாட்சி திருவிளையாடல் போன்ற ஹிட் படங்களில் அவருடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.
சரிதா:
விஜயகாந்துடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகை என்றால் அது சரிதா தான். இவர் மற்ற நடிகைகளை போல இல்லாமல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரிகா முதலில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சரிதா, அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த ஊமை விழிகள் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து இருந்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.