தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம்.
முன்னதாக விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த புதிதில் சில நடிகைகள் இவருடன் சேர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்தனர். தற்போது அந்த நடிகைகள் யார் என்று பார்ப்போம்.
நதியா:
80களில் பிரபலமான நடிகையாக ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை நதியா. தற்போதும் இளமையுடன் காட்சி அளிக்கும் இவர், பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்று அவருடன் நடிக்க நதியா மறுத்திருக்கிறார்.
ராதிகா:
80 களின் காலகட்டத்தில் நடிகை ராதிகா ரொம்பவும் எதார்த்தமான கதாநாயகியாக வெற்றி கண்டவர். இவர் கமல், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டு இருந்தார். இதனிடையே, ராதிகா விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த பின்னாளில் இவர் அவரோடு ஜோடி போட்டு நடித்தது மட்டுமல்லாமல் இருவரும் காதலித்து திருமணம் வரை அந்த உறவு சென்று நின்றது.
அம்பிகா:
80 மற்றும் 90 களில் முன்னணி ஹீரோக்களே அம்பிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டனர். அந்த அளவுக்கு வசீகரமான தோற்றத்தோடு, சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை அம்பிகா கவர்ந்தவர். ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த அம்பிகா, அதன்பின்னர் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தழுவாத கைகள் திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
ராதா:
80 மற்றும் 90 களின் அன்றைய சினிமாவில் நடிகை அம்பிகாவுக்கு போட்டியாக நடித்தது என்றால் அவருடைய தங்கை ராதா என்று தான் சொல்வார்கள். இவரும் முதலில் விஜயகாந்துடன் நடிக்க மறுத்து பின் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம், மீனாட்சி திருவிளையாடல் போன்ற ஹிட் படங்களில் அவருடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.
சரிதா:
விஜயகாந்துடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகை என்றால் அது சரிதா தான். இவர் மற்ற நடிகைகளை போல இல்லாமல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரிகா முதலில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சரிதா, அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த ஊமை விழிகள் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து இருந்தார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.