அம்மா முன்னாடி.. ஸ்ரேயாவை கதற கதற.. ஈகோவை சீண்டியதால் பதிலடி கொடுத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவின் ரசிகர்களை மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஈர்த்தவர் தான் அமீர். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்த நிலையில், கொஞ்சம் கறாரான ஆளான அமீர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தனக்கு வேலை ஆகவில்லை என்றால் யார் என்று கூட பார்க்காமல் கடுமையாக திட்டிவிடும் குணம் கொண்டவர் அமீர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

அந்த வகையில், பிரபல பாடகி அமீரிடம் கடுமையாக திட்டு வாங்கி கதற கதற தேம்பித் தேம்பி அழுது இருக்கிறார். அதாவது கார்த்திக் மற்றும் பிரியாமணி நடித்த சூப்பர் ஹிட் படமான பருத்திவீரன் படத்தில் அய்யய்யோ என் உசுருக்குள்ள என்ற பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருந்தார்.

அந்தப் பாடலுக்காக கமிட்டான ஸ்ரேயா கோஷலுக்காக இரண்டு வாரங்கள் அமீர் காத்திருந்துள்ளார். மும்பையில் இருந்து வந்த இசையமைப்பாளர்களின் பாடலை பாடி கொடுத்துவிட்டு தான் அமீரின் படத்தின் பாடலை ரெக்கார்டிங் செய்ய வந்திருக்கிறார் ஸ்ரேயா.

அந்த சமயத்தில் பல பாடல்களை பாடியதால் சோர்வாக இருக்கிறேன் என்று அமீரிடம் ஸ்ரேயா கோஷல் தெரிவித்து இருக்க அதற்கு அமீர், அதெல்லாம் என் பிரச்சனை கிடையாது என்றும், இன்றே பாடி கொடுத்தாக வேண்டும் என்று கறாராக தெரிவித்துள்ளார்.

இதற்காக இரண்டு வாரங்கள் அமீர் காத்திருந்ததால் இனிமேலும் சாக்குபோக்கு சொன்னால் டென்ஷனாகி விடுவார் என்று ஒரு வழியாக ஸ்ரேயா பாடியும் கொடுத்து உள்ளார். அந்த சமயத்தில் அந்த பாடல் அமீருக்கு திருப்தி இல்லையாம். அந்த பாடலை ஒன்பதாம் வகுப்பை இரண்டு வருடங்களாக படிக்கும் முத்தழகு தான் பாடுகிறார் ஸ்ரேயா கோஷல் கிடையாது என்று கடுமையான சொற்களைக் கூறி ஸ்ரேயாவை திட்டியுள்ளார் அமீர்.

அமீர் கடுமையாக திட்டியதால் ரூமில் தேம்பித் தேம்பி அழுதுள்ளார் ஸ்ரேயா. இதனை பார்த்த அவரது அம்மா மேனேஜரிடம் எதற்காக என் குழந்தையை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே அமீர் எனக்கு வேண்டியது கிடைத்தே ஆக வேண்டும் எதற்கும் பொறுத்துப் போக முடியாது என்றும், ஸ்ரேயா கோஷலுக்கு வேண்டுமானால் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அவரைப் போக சொல்லுங்கள் நான் வேறு ஒருவரை வைத்து பார்த்துக் கொள்கிறேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். உடனே தலைக்கேறிய ஈகோவால் தன் திறமையை காட்டி அப்பாடலை பாடி முடித்துக் கொடுத்துள்ளார் ஸ்ரேயா. பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…

4 minutes ago

தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…

50 minutes ago

அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!

எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…

1 hour ago

சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…

2 hours ago

விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!

ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…

2 hours ago

வீடு புகுந்து பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்.. நகை, செல்போன் பறிப்பு : கோவையில் பகீர்!

கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…

3 hours ago

This website uses cookies.