போனி கபூர் – எச்.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ள திரைப்படம் துணிவு. கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.
இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி, அமீர் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து படக்குழுவில் உள்ள பலர் பிரபல செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அந்த வகையில், துணிவு படத்தில் நடித்த அமீர் மற்றும் பாவனி இருவரும் சில ஊடக பேட்டியில் பங்கேற்று, அதில் தாங்கள் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
அந்த பேட்டி சோசியல் மீடியாவில் பயங்கர வைரலானது. துணிவு படத்தில் பாவனி மற்றும் அமீர் இருவரும் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தனர். இதனால், படம் வெளியானதில் இருந்து பலரும் “நீங்க படத்தில் வந்ததே இரண்டு நிமிடம் தான். அதற்கு எதுக்கு ஓவர் பில்டப்”, என்று இருவரையும் கேலி செய்யும் வகையில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில், அந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் கூறியுள்ளதாவது, “அஜித் அவர்களுடன் நடிக்கிறோம் என்ற ஆனந்தத்தில் என்ன படம், என்ன கதை, என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்கவில்லை. படத்தில் எவ்வளவு நேரம் இருந்தோம் என்பதை விட அஜித் எங்களுடன் படத்திற்கு பிறகு மூன்று மணிநேரம் எங்களுக்கு அறிவுரை கூறினார். அதைத்தான் பெரிய விஷயம் தான் என்று நினைக்கிறோம்”, என்று நெட்டிசன்களின் கேலிக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.