பிரபல தொலைக்காட்சி சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே, பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்ந்து தற்போது ரியல் ஜோடிகளாக மாறப்போகும் அமீர்-பாவ்னியின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளி வந்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்து அமீரின் காதலை ஏற்க தயக்கம் காட்டிய பாவ்னி, பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி நிறைவடையும் தருணத்தில் காதலை ஏற்றுக்கொண்டு அமீருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
அதன்பின் சில ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த காதல் ஜோடி நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் அதே காதல் ஜோடிகளாக நடித்தனர். துணிவு படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தையும் தங்களின் காதல் மேட்டர் தெரிந்து அஜித் என்ன தெரிவித்தார் என்பதையும் ஓப்பனாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் அமீர்-பாவ்னி அளித்த பேட்டியொன்றில் இருவருக்கும் பிப்ரவரி 15ஆம் தேதி திருமணமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவ்னி, அப்படியொன்றும் இல்லை நான் சும்மா அந்த தேதி அப்டேட்டை கூறினேன் என தெரிவித்தார்.
திருமணம் இருக்கிறது ஆனால் இப்போது இல்லை எனவும், சினிமாவில் நடிக்க இப்போது தான் ஆரம்பித்திருக்கிறோம் என்று அமீர் தெரிவித்தார்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.