எல்லாம் TRP-க்காக தான்.. விஜய் டிவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளியிட்ட பிரபலம்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இந்திய அளவில் மிக பிரபலமான பாடலாக திகழ்ந்தவர் அனந்த் வைத்தியநாதன். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பல இசை அமைப்பாளர்களை உருவாக்கியுள்ளார். விஜய் டிவி ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் நடுவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல போட்டியாளர்களுக்கு இவர் முறையான பயிற்சி கொடுத்து பல பாடகர்களை உருவாக்கியுள்ளார். இவரை சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சியில் காணவில்லை, என்ன என்று விசாரித்து பார்த்ததில் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக குரல் வளம் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் மருத்துவர்கள் வேகமாக பாடக்கூடாது என்று கூறியிருந்ததாக தெரியவந்தது.

மேலும், இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டதன் மூலமாக இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் வெறும் 21 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பின்னர் இவர் வெளியே வந்தார்.

இவர் பாடகர் மட்டும் இல்லாமல் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து இவர் கூறியதாவது, தான் எப்போதுமே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் விஜய் டிவியும் மறக்க முடியாது என்றும், தனக்கு ஒரு பெரிய அளவில் மகிழ்ச்சியை தந்தது என்றால், அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் என்றும், ஒரு காலத்தில் தான் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது பலர் தன்னிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பழகியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல சிலர் தன்னிடம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவது ரெண்டு மூணு பாடல் தானே எதுக்காக வெட்டி கதை பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்டதாகவும், அது வேற ஒன்னும் இல்லைங்க எல்லாம் டிஆர்பிக்காக என்று தான் தெரிவித்ததாகவும், ஒவ்வொரு வாரமும் டிஆர்பி குறைந்தால் அவர்கள் எவ்வளவோ கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் எல்லா நிகழ்ச்சிகளும் டிஆர்பி அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தன் பலருக்கு அவர்களுடைய திறமையை மெருகேற்றி இருந்ததாகவும், அதற்காக அவர்கள் தொடர்ந்து மரியாதை தர வேண்டும் என ஆசைப்படவில்லை என்றும், அந்த கலையை அவர்கள் மறந்து விடாமல் இருந்தால் சரி, அந்த கலை அழிந்து விட கூடாது என்றும் சரியாக அவர்கள் பயன்படுத்திக் கொள்வதே தன்னுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். சிலர் பேரும் புகழும் கிடைத்தவுடன் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றும், அது தனக்கு சற்று வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Poorni

Recent Posts

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

13 minutes ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

21 minutes ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

1 hour ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

1 hour ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

This website uses cookies.