சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இந்திய அளவில் மிக பிரபலமான பாடலாக திகழ்ந்தவர் அனந்த் வைத்தியநாதன். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பல இசை அமைப்பாளர்களை உருவாக்கியுள்ளார். விஜய் டிவி ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் நடுவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல போட்டியாளர்களுக்கு இவர் முறையான பயிற்சி கொடுத்து பல பாடகர்களை உருவாக்கியுள்ளார். இவரை சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சியில் காணவில்லை, என்ன என்று விசாரித்து பார்த்ததில் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக குரல் வளம் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் மருத்துவர்கள் வேகமாக பாடக்கூடாது என்று கூறியிருந்ததாக தெரியவந்தது.
மேலும், இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டதன் மூலமாக இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் வெறும் 21 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பின்னர் இவர் வெளியே வந்தார்.
இவர் பாடகர் மட்டும் இல்லாமல் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து இவர் கூறியதாவது, தான் எப்போதுமே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் விஜய் டிவியும் மறக்க முடியாது என்றும், தனக்கு ஒரு பெரிய அளவில் மகிழ்ச்சியை தந்தது என்றால், அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் என்றும், ஒரு காலத்தில் தான் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது பலர் தன்னிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பழகியதாகவும் தெரிவித்திருந்தார்.
அதேபோல சிலர் தன்னிடம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவது ரெண்டு மூணு பாடல் தானே எதுக்காக வெட்டி கதை பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்டதாகவும், அது வேற ஒன்னும் இல்லைங்க எல்லாம் டிஆர்பிக்காக என்று தான் தெரிவித்ததாகவும், ஒவ்வொரு வாரமும் டிஆர்பி குறைந்தால் அவர்கள் எவ்வளவோ கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் எல்லா நிகழ்ச்சிகளும் டிஆர்பி அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தன் பலருக்கு அவர்களுடைய திறமையை மெருகேற்றி இருந்ததாகவும், அதற்காக அவர்கள் தொடர்ந்து மரியாதை தர வேண்டும் என ஆசைப்படவில்லை என்றும், அந்த கலையை அவர்கள் மறந்து விடாமல் இருந்தால் சரி, அந்த கலை அழிந்து விட கூடாது என்றும் சரியாக அவர்கள் பயன்படுத்திக் கொள்வதே தன்னுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். சிலர் பேரும் புகழும் கிடைத்தவுடன் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றும், அது தனக்கு சற்று வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
This website uses cookies.