கியூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சு என மக்களை கவர்ந்த தொகுப்பாளினியாக டிடி என்கிற திவ்யதர்ஷினி இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபலங்களை நேர்த்தியாக கையாண்டு அவர்களை பேட்டி எடுத்து தனிப்பட்ட விஷயங்களை லகுவாக பேசி வாங்குவதில் சிறந்த ஆங்கராக டிடி பார்க்கப்படுகிறார்.
இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி தான். இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இதனிடையே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். 2017ல் விவ் கரைத்து பெற்ற டிடி தற்ப்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.
தொடர்ந்து டிடி , திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் உள்ளிட்டவற்றை தொகுத்து வழங்குவதில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் நடக்க இருக்கும் ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்காக சென்ற டிடி வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் ஐயோ உங்களுக்கு என்ன ஆச்சு? கமெண்ட்ஸ் செய்து கேட்டு வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.