தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பல பேர் சினிமா வாய்ப்புக்காக தேடி சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.ஆனால் தமிழ் சினிமாவில் பலருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் பின்பு தவிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த அங்காடித்தெரு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் மகேஷ்.இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இவருடைய முதல் படமான அங்காடித்தெருவில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்,அதுமட்டுமில்லாமல் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார் இசையில் வெளிவந்த அணைத்து பாடல்களும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய இயக்குனர்கள் அவரை அணுகி கதையை சொன்ன நிலையில்,அவருக்கு எந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது என குழப்பத்தில் இருந்தார்,மேலும் வலுவான கதைக்களத்தை தேர்ந்தெடுக்காமல் நடித்ததால் வெற்றியை ருசிக்க முடியவில்லை.
இதையும் படியுங்க: வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!
அந்த நேரத்தில் விஜயசேதுபதி நடிப்பில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடிக்க முதலில் மகேஷை தான் படக்குழு அணுகியுள்ளனர்,அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை,அடுத்து எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் உள்ள ஷர்வான் கதாபாத்திரமும் இவருக்கு வந்ததே.மேலும் அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி திரைப்படமும் நடிகர் மகேஷுக்கு வந்த வாய்ப்பு தான்.
இப்படி தேடி தேடி வந்த வாய்ப்பை தவறவிட்ட நடிகர் மகேஷ் நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வாய்ய்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.