அனிமல் படத்தில் வரும் ரூ. 800 கோடி வீடு இந்த ஸ்டார் நடிகரின் வீடு தானாம்!

சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது. ஆம், படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 21 நிமிடத்திற்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

என்னதான் பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் ஒரு அளவில்லையா? என ஆடியன்ஸ் விளாசித்தள்ளியுள்ளனர். தியேட்டரில் உட்கார்ந்திருந்த எல்லோரும் ஆள விடுடா சாமி என்று அலறி அடித்து ஓடும் அளவுக்கு படத்தை எடுத்து வைத்துள்ளனர். அப்பா மகன் சண்டைக்கு எதுக்கு இவ்வளவு வன்முறை? ரன்பீர் கபூர் வெர்ஷனில் ஒரு அர்ஜுன் ரெட்டி என மோசமாக விமர்சித்துள்ளனர்.

இப்படி பல விமர்சனங்களை தாண்டி ரன்பீர் கபூர் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இப்படத்தில் வரும் பங்களா பிரபல பாலிவுட் நடிகரான சைப் அலி கானின் சொந்தமான அரண்மனை தானாம் அதன் விலை கிட்டத்தட்ட ரூ. 800 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

58 minutes ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

2 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

4 hours ago

This website uses cookies.