ஆள் இல்லாத தெரு.. மணிமேகலையால் நடுரோட்டில் மாட்டிக்கொண்டு முழித்த அனிதா சம்பத்..!

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

மேலும், இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனால் சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தார்.

இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். மேலும், இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. இதிலும் இவர் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. மேலும், இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை அனிதா சம்பத் பகிர்ந்துள்ளார். அதில், பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய போது வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினேன். அந்த ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் அம்மா உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று கேட்க ஆம் நான் செய்தி வாசிப்பாளர் டிவியில் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் என்று கூறினேன். நீங்க சன் மியூசிக்கல் வரும் மணிமேகலை தானே என்று அவர் சொன்னதும் என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. என்னை வேறொரு பிரபலம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் எத்தனை பேர் இதே போல் என்னை நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து சென்று கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் வண்டியில் வந்து ஆளில்லாத அந்த தெருவில் திடீரென நிறுத்தினார்கள். ஒருவன் வேகமாக இறங்கி உங்களிடம் செல்ஃபி எடுக்கணும் என்று கேட்டான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாம் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது. இவர்கள் வேறு செல்பி எடுக்கணும்னு கேக்குறாங்களே, அந்த பையனை பார்த்தால் ரவுடி போல் இருந்தது அது பயமாகவும் இருந்தது. உடனே அவனுடைய நண்பனிடம் டேய் சீக்கிரம் வாடா சன் மியூசிக் மணிமேகலை வந்து இருக்காங்க என்று செல்பி எடுக்க அழைத்தான். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். பின்னர் அவனிடம் நான் மணிமேகலை கிடையாது நான் செய்தி வாசிப்பாளர் ஆக பணியாற்றி வருகிறேன் என்று தெளிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து வந்ததாக அணிதா சம்பத் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

55 minutes ago

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 hours ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

2 hours ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

3 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

3 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

4 hours ago

This website uses cookies.