வயதானாலும் நடிப்பதில் இருக்கும் ஆர்வம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விட்டு போகவில்லை. அவரது நடிப்பில் வெளியான படம்தான் அண்ணாத்த. இதில், ரஜினிக்கு தாயாக நடித்தம் கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி நாயர். இவர் கேரளாவில் பிறந்தவராக இருந்தாலும், தமிழில் சரளமாக பேசக் கூடியவர் என்பதால், தமிழிலும் பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகிறது.
அண்மையில் விஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அனீஸ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவகாரத்து பெற்று விட்டனர். ஆவ்னி என்ற ஒரு மகளை அஞ்சலி நாயர்தான் வளர்த்தி வருகிறார். தற்போது, அஜித் ராஜு என்ற உதவி இயக்குநரை காதலித்து, இந்த மாதம்தான் 2வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், தனக்கு நடந்த கசப்பான நிகழ்வை அஞ்சலி நாயர் வெளியே சொல்லியுள்ளார். தமிழில் ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அப்படத்தின் உதவி இயக்குநரும், வில்லன் நடிகருமான ஒருவர் இவரை காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்தும் தன்னை வீட்டுக்கு அனுப்ப மறுத்ததாகவும் கூறிய அஞ்சலி நாயர், ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய அந்த நடிகர் முயற்சித்தாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த நபர் மீது போலீஸில் அளித்த புகாரின் பேரில், அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பியதாகவும், அதன்பிறகு எந்த தொந்தரவும் இல்லை என்று கூறியுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.