சினிமா / TV

அப்போது நானும் டியூட்டியில் இருந்தேன் – ரியல் “அமரன்” குறித்து அண்ணாமலை பதிவு!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தான் அமரன்.

இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மறைந்த இராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் தியாகத்தையும் அவர்கள் நாட்டிற்காக செய்யும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார் இதில் அமரக் கதாபாத் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரிலே இது மிக முக்கியமான அழுத்தமான படம் என்று கூறலாம் என ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து மிகவும் எமோஷ்னலாக பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்தார்கள் .

மேலும் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் அமோக வசூல் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பக்கத்தில் அமரன் படம் பார்த்தது குறித்து நெகிழ்ச்சியாக தனது பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதாவது ராணுவ வீரர்களின் நேர்மை வீரம் தைரியம் உள்ளிட்ட பல அம்சங்களில் அமரன் திரைப்படம் முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். மக்களுக்காக ஒரு வீரன் தன்னை தியாகம் செய்யும்போது ஒரு குடும்பத்தின் இழப்பு என்பது மிகத் தெளிவாக இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.

நம்மை விட இராணுவ வீரர்கள் ஏன் சிறப்பானவர்கள் என்று கேட்டால் பெருமையுடன் ராணுவ உடைய அணிந்து கொண்டு விருப்பத்துடன் போர்க்களத்துக்கு செல்வார்கள். ஒரு ராணுவ வீரரின் குடும்பம் அதை பெருமையாக கருதும். மேஜர் முக்குந்த் வரதராஜனின் வாழ்க்கை பல யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் அந்த சமயத்தில் நான் காவல்துறை பொறுப்பில் இருந்தேன்.

எனவே அவர் நம் தேசத்துக்காக செய்த தியாகம் எங்களுக்கு ஏதோ ஒன்று இருந்த ஒரு வலியையும் உணர்வையும் தந்தது. அந்த நினைவுகள் எனக்கு இன்னும் நீங்காமல் அப்படியே இருக்கிறது. ராஜ்குமார் பெரிய சாமியின் சிறப்பான இயக்கம், நடிகர் சிவகார்த்திகேயன் திரையுலகில் மிக முக்கியமான படமாக அமரன் திரைப்படம் அமைந்திருக்கிறது .

சாய் பல்லவியின் சாதாரண நடிப்பு எல்லோரது ரசனைக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்த படத்தை தயாரித்த கமல்ஹாசனுக்கு நன்றி. இந்த படம் ராணுவ வீரர்களுக்கும் நம் நாட்டுக்காக தங்களை இழந்தவர்களுக்கும் சிறந்த மரியாவையும் அஞ்சலியும் என நினைக்கிறேன். இந்திய ராணுவம் வாழ்க நீங்கள் தான் சிறந்தவர்கள் என்பதை பெருமையுடன் நான் மீண்டும் சொல்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அண்ணாமலையின் இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

15 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

15 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.