டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய அனுபமா .. தலையில் துண்டை போடும் நிலைமையில் தயாரிப்பாளர்கள்..!
Author: Vignesh9 May 2024, 6:16 pm
அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுங்கு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

மேலும் படிக்க: வீங்கிய முகத்துடன் இருக்கும் காஜல் அகர்வால்.. ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாங்களே..!
அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க: நான் அங்கிளின் அசிஸ்டண்ட் இல்லை.. புது மாப்பிள்ளையுடன் ஷங்கர் அளித்த பிரஸ்மீட்..!
அனுபமா கடந்தாண்டு வெளியான ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப் லாக் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளம் பெற்றிருந்தார். மேலும், அவர் நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் அவர் மடிமீது உட்கார்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது, ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூபாய் ஒரு கோடி சம்பளம் வாங்கி வந்தார்.
முன்னதாக அனுபமா ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது, அதனை ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு விளம்பரத்திற்கு 80 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான தயாரிப்பாளர்கள் இப்படி டபுள் மடங்கா ஏத்திட்டு இருந்தா தலையில் துண்டை போட்டுட்டு போக வேண்டியது தான் என்று புலம்பி வருகிறார்களாம்.