மரியாதை கெட்டுடும் சொல்லிட்டேன்… ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபப்பட்ட அனுஷ்கா ஷெட்டி!
Author: Shree24 September 2023, 4:31 pm
நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகாவை சேர்ந்தவரான இவர் யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார்.
2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் -நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன் பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி தாராளமாக காட்டி நடித்த அனுஷ்கா அருந்ததி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
மரியாதை மிக்க அப்படத்தில் நடித்த பிறகு கவர்ச்சியை ஏறகட்டிவிட்டு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார்.
அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இதனிடையே அனுஷாகாவிற்கு பெற்றோர்கள் வேறொறு தொழிலதிபரை வரன் பார்க்க பணத்திற்காக பிரபாஸை கழட்டிவிட்டு சென்றார். ஆனால், பிரபாஸ் விட்ட சாபமோ என்னவோ இதுவரை அவருக்கு திருமணம் ஆகவே இல்லை.
இந்நிலையில் நடிகர் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் நடித்தபோது தனக்கென மேக்கப் ஆர்டிஸ்ட்களை கூட்டிவந்துள்ளார் அனுஷ்கா. அவர்கள் மேக்கப் யூனியனை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் மேக்கப் யூனியனில் இருந்து பிரச்சனை செய்துள்ளனர். இதனால் கார்த்தி அனுஷ்காவிடம் வந்தது ” தயவு செய்து நீங்க கூப்பிட்டு வந்த ஆட்களை திருப்பி அனுப்பிடுங்கள் நான் போய் சொன்னால் மரியாதையாக இருக்காது. இல்லையெனில் இங்கு பிரச்சனை வெடிக்கும் என எச்சரித்துள்ளார். இதனால் அனுஷ்கா வேறு வழி இன்றி அவர்களை அனுப்பிவிட்டு தனக்குத்தானே மேக்கப் போட்டுக்கொண்டு அரைமனத்தோடு அப்படத்தில் நடித்து கொடுத்தாராம்.