கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான என்ஜாய் என்ஜாமி பாடல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தரப்பில் வெளியானது. இந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதில், சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் தெருக்குறள் அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.
மிகப் பெரிய ஹிட்டான அந்த பாடல் தொடர்பாக ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு இடையே பல்வேறு சர்ச்சைகள் ஒரு வருடத்துக்கு முன்பே வெடித்திருந்தது. இப்பாடலை, எழுதி கம்போஸ் செய்து பாடியது நான் யாரும் எனக்கு மெட்டு தரவில்லை என அறிவு கூற அவருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே இருந்த பிரச்சினை வெளியே தெரிய வந்தது.
இந்நிலையில், என்ஜாய் எஞ்சாமி படல் குறித்து தற்போது, சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மியூசிக் நிறுவனம் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பில்லியன் ரசிகர்களுக்கு மேல் பார்க்கப்பட்ட பாடலுக்கு ஆர்டிஸ்ட்களுக்கு ஒரு ரூபாய் கூட இதுவரை வரவில்லை என வருத்துடன் தெரிவித்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த யூடியூப் சேனலை ரகுமான் தான் இங்கு அறிமுகம் செய்துள்ளார்.
மேலும், ரகுமான் தொடங்கி வைத்த சேனல் இப்படி ஒரு மோசடி செய்ததா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், ஏ ஆர் ரகுமான் சந்தோஷ் நாராயணனின் முதுகில் குத்தி விட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, ஏ ஆர் ரஹ்மான் மேல் விமர்சனங்கள் எழ அவர் அதற்கு விளக்கமளித்திருந்தார்.
மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் தான் மட்டுமின்றி பாடலை அறிமுகப்படுத்திய ஏ ஆர் ரகுமானும் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாக கூறிய சந்தோஷ் நாராயணன் தான் மட்டும் இன்றி இப்பாடலில் பணியாற்றிய தீ, அறிவு உள்ளிட்டவர்களுக்கும் வருமானம் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டுள்ளார். மேலும், தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் வருவதாகவும், பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனையில், தான் பா.ரஞ்சித் மற்றும் அறிவுக்கு முழு ஆதரவு அளிப்பேன் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.